கருணாஸ் ஜோடியாக நடித்த நடிகைக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

கருணாஸ் ஜோடியாக நடித்த நடிகைக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

போலி சாதிச்சான்றிதழ் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகையும், முன்னாள் எம்.பியுமான நவ்நீத் கவுருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்தவர் நவ்நீத் கவுர். இவர் தெலுங்கில் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் இவர் 2008-ம் ஆண்டு வெளியான 'அரசாங்கம்' திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்த் ஜோடியாக நடித்துள்ளார்.2010-ம் ஆண்டு நடிகர் கருணாஸ் ஜோடியாக 'அம்பா சமுத்திரம் அம்பானி' படத்தில் நடித்துள்ளார். இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுயேச்சை எம்எல்ஏ ரவி ரானாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், 2019-ம் ஆண்டு பட்டியல் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நாடாளுமன்றத் தொகுதியில் நவ்நீத் கவுர் சுயேச்சையாக போட்டியிட்டார். இதற்காக தேர்தல் ஆணையத்திடம் நவ்நீத் கவுர் போலிச்சான்றிதழ் கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக. மும்பை முல்லுண்டு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மும்பை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நவ்நீத் கவுர் மற்றும் அவரது தந்தை ஆஜராகவில்லை. இதனால் நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக கடந்த செப்டம்பர் மாதம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நவ்நீத் கவுருக்கு எதிரான பிடிவாரண்ட்டை செயல்படுத்த கூடுதல் அவகாசம் வேண்டும் என போலீஸார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை நிராகரித்த மாஜிஸ்திரேட்டு மோகாஷி, நவ்நீத் கவுர் மற்றும் அவரது தந்தைக்கு எதிராக, ஜாமீனில் வெளிவர முடியாத புதிய பிடிவாரண்டை பிறப்பித்தார். மேலும் பிடிவாரண்ட் உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவ. 28-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in