
ஆஹா... சுஹானா!
பிரபல ஆடை வடிவமைப்பாளரான மனீஷ் மல்ஹோத்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வாரம் பகிர்ந்திருந்த, பாலிவுட் பிரபலம் ஒருவரின் வாரிசு புகைப்படம் ஒரேநாளில் பற்றிக்கொண்டது. அந்த புகைப்படத்தில் காட்சியளித்தவர், பாலிவுட் பாஷாவான ஷாருக் கான் மகள் சுஹானா கான்!
கடந்த அக்டோபரில், போதைப்பொருள் புகாரின்கீழ் மகன் ஆரியன் கான் கைதானபோது, ஷாருக் கான் சோர்ந்து போனார். சமூக ஊடகப் புரளிகள், அரசியல் முட்டுக்கட்டைகள் ஆகியவற்றால் கான் குடும்பம் வெகுவாக அலைக்கழிந்தது. சிறை, வழக்கு, விசாரணை என ஆரியன் மீண்ட பிறகும், குடும்பத்தில் சிக்கல்கள் தொடர்ந்தன. மருத்துவ கவுன்சிலிங், நீதிமன்ற உத்தரவை மீறும் வெளிநாட்டு ஆர்வம் என ஆரியனை சமாளிக்கத் தடுமாறிப்போனார்கள். இந்த நேரத்தில் அமெரிக்காவில் படிப்பு முடித்து திரும்பிய சுஹானா கான், தனது சகோதரனை தடுத்தாட்கொண்டார்.
தங்கையின் அரவணைப்பும், வழிநடத்தலும் ஆரியனை மீட்டிருப்பதோடு, கான் குடும்பத்தில் மறுபடியும் மகிழ்ச்சி திரும்பியிருக்கிறது. வாரிசுகள் இருவருமாக சேர்ந்து தந்தையின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணிக்கான பெங்களூரு ஏல நிகழ்வில் கடந்த வாரம் பொறுப்புடன் பங்கேற்றனர். சுஹானா உதவியுடன் குடும்ப நிறுவனமான ரெட் சில்லிஸ் நிர்வாகங்களை ஆரியன் கவனிக்க ஆரம்பித்திருக்கிறார். குடும்பத்தில் மகளின் ஆதுர உதவியை மெச்சிய ஷாருக் - கௌரி தம்பதியர், சுஹானாவின் சினிமா கனவுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.
தந்தை விதித்த நிபந்தனைக்காக நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்திருக்கும் சுஹானா, அடுத்த கட்டமாக தனது கனவுகளை ஈடேற்ற பாலிவுட்டில் கால் பதிக்கத் தயாராகிறார். அப்படி சுஹானாவுக்காக மனீஷ் மல்ஹோத்ரா எடுத்த புகைப்படங்களே வைரலாகி வருகின்றன.
பாலிவுட் நாயகிகளுக்கான கற்பித இலக்கணங்களை உடைத்து, சாமானியப் பெண்ணை திரையில் பிரதிபலிக்கச் செய்ய வேண்டும் என்பது சுஹானாவின் சினிமா ஆசைகளில் ஒன்று. அவரது வைரல் புகைப்படமும் அதையே பிரதிபலிக்கிறது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.