
பொழுதுபோக்குக்கு அடுத்தபடியாக ஆன்மிக பதிவுகளே யூடியூப் வீடியோக்களில் தனித்தடம் பதிக்கின்றன. ஆனபோதும் அவர்களில், மக்களின் ஆன்மிக நம்பிக்கையை பொறுப்போடு கையாளுவோர் அரிது. கிருபானந்த வாரியரின் சீடரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான சொல்லரசி மங்கையர்கரசி இந்த அரிதானவர்களில் ஒருவர். இவரது ’ஆத்ம ஞான மையம்’ யூடியூப் சேனல் ஆன்மிக அன்பர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது.
ஒரு காலத்தில் மக்களின் இதயத்தில் சிம்மாசனமிட்டிருந்த மேடைப் பேச்சாளர்கள் பலரும், சேட்டிலைட் சேனல்கள், சமூக ஊடகங்கள், ஓடிடி தளங்கள் உள்ளிட்டவற்றின் வருகையால் காணாமல் போனார்கள். காலத்துக்கேற்ற மாற்றத்தை உள்வாங்கிக்கொண்ட மங்கையர்கரசி, யூடியூப் வாயிலாக தனது நேயர்களுடன் தொடர்பு அறுபடாதிருக்கிறார். தனது பாணியிலான ஆன்மிக சொற்பொழிவுகள் மட்டுமன்றி பண்டிகை வழிபாடுகள், அவற்றுக்கான ஆன்மிக நெறிமுறைகள் ஆகியவற்றையும் தனது கணீர் குரலில் வழங்கி வருகிறார்.
இவற்றோடு சுயமுன்னேற்றம், மகளிருக்கான பிரத்யேகங்கள் , ஜோதிடம், ஆரோக்கியம், இல்லறம் தொடர்பான வழிகாட்டுதல்களையும் மங்கையர்கரசி வழங்குகிறார். அறிவியலாளர்களின் கேள்விக்குட்பட்ட தலைப்புகளையும் உரிய பொறுப்பு துறப்புடன் சமயோசிதமாய் அணுகுகிறார். இரண்டரை மில்லியன் சந்தாதாரர்களை நெருங்கும் இவரது சேனலில், தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு சொல்லரசி வெளியிடும் சிறப்பு வீடியோக்கள் அமோக வரவேற்பை அள்ளி வருகின்றன.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.