
உலகத்தையே புரட்டிப்போட்டிருக்கும் பெருந்தொற்று காலத்தின் பக்க விளைவுகள் நித்தியானந்தாவையும் விட்டு வைக்கவில்லை. சுகவீனம் கண்டிருக்கிறார், புரவலர்கள் புறக்கணிப்பால் விரக்தியில் ஆழ்ந்திருக்கிறார் என்பதில் தொடங்கி, நித்தி இறந்துவிட்டார் என்பது வரை கடந்த சில தினங்களாக வதந்திகள் பரபரத்தன.
புரளிகளைப் புறம் தள்ளுவதற்காக நித்தியானந்தாவின் பழைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை, நித்தி சீடர்கள் அதிகாரபூர்வமாக உலவும் முகநூல் பக்கங்கள் மற்றும் குழுக்களில் மீண்டும் சுற்றுக்கு விடப்பட்டன. அப்படியும் நித்திக்கு எதிரான வதந்தி புயல் ஓயாததில், கைலாசாவின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் நித்தியானந்தாவின் புதிய புகைப்படங்களை வெளியிட்டார்கள். அதில் நித்தியே கைப்பட எழுதுவதாக இரண்டொரு வரிகளையும் சேர்ந்திருந்தனர். அதில் ’நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...’ என்று வழக்கமான பஞ்ச் வைத்திருந்தார் நித்தி.
ஆனால், அந்த புகைப்படங்களில் பழைய நித்தியின் தேஜஸ் காணோம். படுசோர்வாகவும், தளர்ந்தும் காட்சியளித்தார். நித்தியின் உடல் பின்னடைவு குறித்த நீண்ட விளக்கமும் இந்த முகநூல் பக்கங்களில் வெளியாகின. சமாதி நிலையில் தனது உடலை ஆன்மிக பரிசோதனைக்கு உட்படுத்தியிருப்பதாகவும், 27 மருத்துவர்கள் அதனைப் பரிசோதித்து வருவதாகவும் புதிரான கருத்துக்கள் அதில் இடம்பெற்றிருந்தன.
ஆஸ்திரேலியா அருகே அடையாளம் அறியப்படாத தீவு ஒன்றில் அமர்ந்துகொண்டு, கடந்த சில வருடங்களாக தனது கைலாசா அருளுரையை ஆன்லைனில் தொடர்ந்து வந்தார் நித்தி. இந்த இடைவெளியில் ’நித்தியின் முகமூடியைக் கிழிக்கிறோம்’ என அவரது முன்னாள் வெளிநாட்டு பக்தர்கள் சிலர் கிளம்பினர். இவர்கள் உட்பட மேலும் சிலர் தொடுத்திருக்கும் மோசடி குற்றச்சாட்டுகள், காலாவதியான பாஸ்போர்ட், இந்தியாவிலிருந்து நீண்ட ஆதரவு கரங்களின் நிராகரிப்பு, பிடதி ஆசிரமத்தில் அதிகரிக்கும் கொந்தளிப்பு உள்ளிட்டவை நித்தியானந்தாவை நிம்மதி இழக்கச் செய்திருக்கின்றன.
சமூக ஊடகங்களுக்கு ஓய்வின்றி கன்டென்ட் வாரி வழங்கி வந்த நித்தியானந்தாவின் உடல் நிலை பாதித்திருப்பது மட்டும் உறுதியாகியிருக்க, முதல்முறையாக நெட்டிசன்களின் பரிதாபத்தையும் சம்பாதித்திருக்கிறார் நித்தி.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.