சென்னையில் மழை வெள்ளப் பாதிப்பு பகுதிகளைப் பார்வையிடுகிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திய போட்டோஷூட் அவருக்கே வினையாகிவிட்டது. முதல்வர் ஸ்டாலினின் தொகுதியில் முட்டியளவு நீரில் படகில் சென்றவரை ஒரு மூதாட்டி மூக்குடைத்து அனுப்பியிருக்கிறார். இந்த வீடியோ காட்சியும், போட்டோ, வீடியோ எடுப்பதற்காக மழை நீரில் நின்றிருந்தவர்களை நகரச் சொல்லிய காட்சியும் இணையத்தில் வைரலானது. நெட்டிசன்கள், ‘கோட் ஆன் போட்’ என்ற ஹேஷ்டேக்குடன் மீம், பதிவுகள் போட்டு கிண்டலடித்தார்கள். ‘ஆழம் தெரியாமல் காலை விடாதே... அது அந்தக் காலம். ஆழம் தெரியாமல் போட் விடாதே... இது இந்தக் காலம்’ என்று இன்னமும் நையாண்டி செய்கிறார்கள்.
பாஜகவுக்கு எதிரான போராட்டத்தை தொடருங்கள்; நம்மிடம் உண்மை உள்ளது, பயப்பட வேண்டாம் - ராகுல்காந்தி
ஆமா, ஆனா என்ன... ஒற்றுமை தான் இல்லை!
- இதயவன்
தேசத்துக்காக விளையாடுவதைவிட, ஐபிஎல் தொடரில் விளையாடவே வீரர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள் - கபில்தேவ்
நாட்டுக்காக விளையாடாம நோட்டுக்காக விளையாடுறாங்கன்னு சுருக்கமா சொல்றாரு?
- பா.சக்திவேல்
முல்லை பெரியாறு அணைக்கு பலமுறை சென்று இருக்கிறேன் - ஓபிஎஸ்
ஸ்கூல் டூர் போனதை எல்லாம் சொல்ல கூடாது... தலீவா!
-நெல்லை அண்ணாச்சி
ஒரே குடும்பத்தைச் சுற்றி வரும் கட்சி அல்ல பாஜக- பிரதமர் மோடி.
ஆமா, அம்பானி, அதானினு பல குடும்பங்களைச் சுற்றி வருவோம்!
- மோகன்ராம்
முல்லை பெரியாறு அணையை ஒரு லட்சம் பேருடன் சென்று தமிழக பாஜக முற்றுகையிடும் - அண்ணாமலை
திருத்தம்... ஒரு லட்சம் பேருடன் இல்ல முருகேசா... ஒரு லட்சம் சேருடன்!
- நிதன்கிரிஷ்