
சென்னையில் மழை வெள்ளப் பாதிப்பு பகுதிகளைப் பார்வையிடுகிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திய போட்டோஷூட் அவருக்கே வினையாகிவிட்டது. முதல்வர் ஸ்டாலினின் தொகுதியில் முட்டியளவு நீரில் படகில் சென்றவரை ஒரு மூதாட்டி மூக்குடைத்து அனுப்பியிருக்கிறார். இந்த வீடியோ காட்சியும், போட்டோ, வீடியோ எடுப்பதற்காக மழை நீரில் நின்றிருந்தவர்களை நகரச் சொல்லிய காட்சியும் இணையத்தில் வைரலானது. நெட்டிசன்கள், ‘கோட் ஆன் போட்’ என்ற ஹேஷ்டேக்குடன் மீம், பதிவுகள் போட்டு கிண்டலடித்தார்கள். ‘ஆழம் தெரியாமல் காலை விடாதே... அது அந்தக் காலம். ஆழம் தெரியாமல் போட் விடாதே... இது இந்தக் காலம்’ என்று இன்னமும் நையாண்டி செய்கிறார்கள்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.