நித்தியின் கைலாச லோகம்!

நித்தியின் கைலாச லோகம்!

தொகுப்பு: தேவா

கதை விடுவதில் நீயா நானா எனப் போட்டிப் போடும் அளவுக்கு சீமானும், நித்தியானந்தாவும் மாறி மாறி அள்ளிவிட தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கிறார்கள். சமூக வலைதளங்களைத் திறந்தாலே இவர்களுடைய ராஜ்ஜியம்தான். தனி தேசியம், தனி ஈழம் எனப் பல ஆண்டுகளாகக் கதறிக்கொண்டிருக்கிறார்  சீமான். ஆனால், தனி நாடு வாங்குவதில் அவரை முந்திவிட்டார் நித்தியானந்தா. நித்தியானந்தாவைக் காணவில்லை எனப் புரளி கிளம்பிய நிலையில் திடீரென்று புதிதாக ஒரு தீவை வாங்கி அதைத் தனி நாடாக அறிவித்து நாட்டுக்குப் பெயரும் கொடியும் வெளியிட்டு அதகளப்படுத்திவிட்டார் நித்தி. நீரவ் மோடி, மல்லையாக்களைத் தொடர்ந்து நித்தி விஷயத்தில ஒரு படி மேலே போய், புது நாடே உருவாக்கி அதிபராகும் வரைக்கும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறது நமது உளவுத்துறை. பாலியல் வழக்கு, சிறுமிகளை அடைத்து சித்ரவதை என எந்தக் குற்றச்சாட்டும், வழக்கும் விசாரணையும் இந்தக் கைலாச நாட்டு அதிபரை இனி என்ன செய்யுமோ?!

சாமியார்களுக்கு மானம், அவமானம் இருக்கக் கூடாது. - நித்தியானந்தா.

மொதல்ல, ’பெட் ரூமுக்கு உள்ளே கேமரா இருக்கக் கூடாது’னு சொல்லுங்க.- நாகராஜ சோழன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in