
மதுரையில் 23-வது மாநில மாநாட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கட்சியை வளர்க்கவும், பாஜகவை வீழ்த்தவும் இந்த மாநாட்டில் புதிய வியூகங்கங்கள் வகுக்கப்படும் என்று மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்திருக்கிறார். வாட்ஸ் - அப் ஸ்டேட்டஸில்கூட ‘வெல்வோமே’ என்ற மாநாட்டுப் பாடலை வைத்துக்கொண்டு, பொதுவுடமைத் தோழர்கள் ஊர் ஊராக செங்கொடி ஏற்றுகிறார்கள். பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிற இம்மாநாடு குறித்து, அக்கட்சியின் அறிவுஜீவி முகங்களில் ஒருவரான பேராசிரியர் அருணனிடம் பேசினோம். இனி பேட்டி...
இன்றைய அரசியல் சூழலில் மதுரை மாநாடு எந்த வகையில் முக்கியமானது என்று விளக்கலாமா?
அகில இந்திய அளவில் இந்திய மக்களுடைய பிரதான எதிரியாக இருப்பது பாஜகவும், அதை ஆட்டிப் படைக்கிற ஆர்எஸ்எஸ்சும்தான். கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் எதிரிகளாகக் கட்டமைத்து இந்து மக்களைத் திரட்டுகிற அவர்களின் ஆட்சி, அந்த இந்து மக்களுக்கும் எதிரானதாகத்தான் இருக்கிறது. பாஜகவின் சமூக, பொருளாதார, சமூகநீதிக் கொள்கையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இந்துக்கள்தான். ஏழை இந்துக்களின் வயிற்றில் அடிக்கிற இவர்கள் எப்படி இந்துக்களுக்கான கட்சியாக இருக்க முடியும்? இப்போதே இப்படி என்றால் இவர்கள் அமைக்கத் துடிக்கிற இந்து ராஷ்டிரம் என்ன லட்சணத்தில் இருக்கும்? என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக பெரிய சக்தி இல்லை என்றாலும்கூட, ஒன்றிய ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நாங்கள்தான் திமுகவுக்கான பிரதான எதிர்க்கட்சி என்று காட்டிக்கொள்ள பெருமுயற்சியில் இறங்கியிருக்கிறது. இதுகுறித்து முக்கியமாக மாநாட்டில் விவாதிக்க இருக்கிறோம்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.