
திமுகவினரால் 'மைக் மோகன்' என்று கிண்டலடிக்கப்படும் அளவுக்குத் தினந்தினம் பேட்டி கொடுப்பவர், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார். சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்தாலும்கூட, பிரஸ் மீட்டை மட்டும் விடவே இல்லை அவர். எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்சும் கூட கருத்துச் சொல்ல தயங்குகிற விஷயங்கள் பற்றிக்கூட, மணிக்கணக்காக பேசக்கூடிய அவர், இப்போது சிறையில் இருக்கிறார். அவரை எப்படியாவது ஜாமீனில் வெளியே கொண்டுவந்துவிட வேண்டுமென, ராப்பகலாய் சுற்றுகிறார் அவரது மகனும் முன்னாள் எம்பியுமான ஜெயவர்தன். காமதேனு பேட்டிக்காக அழைத்தபோது, “கோர்ட்டில் இருக்கிறேன். பிறகு அழைக்கிறேன்” என்று சொன்னவர், இரவில் அழைத்தார். இனி பேட்டி...
உங்கள் தந்தையின் ஜாமீன் மனு எந்த நிலையில் இருக்கிறது?
வேண்டுமென்றே மிகக் கடுமையான பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்திருக்கிறார்கள். அப்பாவுக்கு ஜாமீன் கேட்டு முதலில் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு போட்டோம். அரசுத் தரப்பில் கடுமையான ஆட்சேபம் தெரிவித்தார்கள். நீதிமன்றமும் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. செசன்ஸ் கோர்ட்டில், அந்த நபர் கள்ள ஓட்டுப்போட வந்தது, கல்வீசித் தாக்கியது உள்ளிட்ட ஆதாரங்களை அளித்தோம். ஆனால், திமுக வக்கீலும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ, அப்பா பெரிய கொலைக்குற்றம் செய்ததுபோல சித்தரித்துப் பேசினார். எனவே, அங்கேயும் ஜாமீன் கிடைக்கவில்லை. அடுத்து உயர் நீதிமன்றத்தை அணுகுவது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம்.
திமுககாரரைத் தாக்கி, அரை நிர்வாணப்படுத்திய காட்சியை உங்கள் தந்தையே தனது முகநூல் பதிவில் வீடியோவாகப் போட்டிருக்கிறார். பிறகெப்படி இதைப் பொய் வழக்கு என்று சொல்கிறீர்கள்?
கள்ள ஓட்டுப்போட முயன்று அதிமுகவினரிடம் சிக்கிய அந்த நபர் பெயர் நரேஷ்; சன் ஆஃப் ராஜேந்திரன். அவர் ஒரு சமூக விரோதி. மோசடி உட்பட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது இருக்கின்றன. சில வழக்குகளில் தண்டனையும் பெற்றிருக்கிறார். சம்பவ தினத்தன்று கூட கள்ள ஓட்டுப்போட வந்த அவர், பயங்கர ஆயுதங்களையும் வைத்திருந்திருக்கிறார். தேர்தல் அதிகாரிகள் நியாயமாக இருந்தால், அதை வீடியோ பதிவுசெய்து, அவர்களே போலீஸில் புகார் செய்திருக்கலாம். அவர்களும் அப்படிச் செய்யவில்லை. போலீஸாரும் அந்த நபர் கள்ள ஓட்டுப்போட ஒத்தாசையாக இருந்திருக்கிறார்கள்.
இதுபற்றி கேள்விப்பட்டதும், முன்னாள் எம்எல்ஏ, முன்னாள் மாவட்டக் கழகச் செயலாளர் என்ற முறையில் என் தந்தை ஸ்பாட்டுக்குச் சென்றார். உடனே அந்த நபர் கல்வீச்சு நடத்தியிருக்கிறார். அதிமுகவினரையும் போலீஸையும் தள்ளிவிட்டிருக்கிறார். கையில் ஆயுதம் வைத்திருக்கிற ஒரு சமூகவிரோதியைப் பிடித்து கழுத்தில் மாலை போட்டு, கையில் மல்லிகைப்பூவை கட்டி மைனர் போலவா போலீஸில் ஒப்படைக்க முடியும்? தற்காப்புக்காகத்தான் அவரது கையைக் கட்டச் சொன்னார். அவரை அடிக்க வேண்டாம் என்று அப்பா சொன்னது வீடியோவில் தெளிவாகப் பதிவாகியிருக்கிறதே?
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.