ஒரத்தநாட்டில் மீண்டும் வாகை சூடுவாரா வைத்திலிங்கம்?

ஒரத்தநாட்டில் மீண்டும் வாகை சூடுவாரா வைத்திலிங்கம்?

எம்.கபிலன்
readers@kamadenu.in

தனது சொந்தத் தொகுதியான ஒரத்தநாட்டில் 2001, 2006, 2011 என தொடர்ச்சியாக 3 தேர்தல்களிலும் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்து, ஜெயலலிதாவிடம் நன்மதிப்பைப் பெற்றவர் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம். அதனால், இவருக்கு அமைச்சர் பதவியும் கொடுத்து அங்கீகரித்தார் ஜெயலலிதா.

கடந்த முறையும் இவருக்கே சீட் கொடுக்கப்பட்டது. அப்போது திமுக தரப்பில் பழனிமாணிக்கத்தின் தம்பி ராஜ்குமாருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. 3 முறை வாகை சூடிய வைத்திலிங்கத்தை எதிர்த்து நிற்க தன்னால் முடியாது என்று தனக்களிக்கப்பட்ட வாய்ப்பையே மறுத்துவிட்டார் ராஜ்குமார்.

இதையடுத்து முன்னாள் எம்எல்ஏ-வான ‘புல்லட்’ எம்.ராமச்சந்திரனை வேட்பாளராக அறிவித்தது திமுக தலைமை. அந்தத் திடீர் வேட்பாளர் ராமச்சந்திரன், வெல்ல முடியாத மனிதராகக் கருதப்பட்ட வைத்திலிங்கத்தை 3,645 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in