ஆளவிடுவாரா... ஆட்சியைக் கவிழ்ப்பாரா?- தமிழிசையின் கையில் நாராயணசாமியின் குடுமி

ஆளவிடுவாரா... ஆட்சியைக் கவிழ்ப்பாரா?- தமிழிசையின் கையில் நாராயணசாமியின் குடுமி

கரு.முத்து
muthu.k@kamadenu.in

சங்கடங்களுக்கு நடுவில் கிடைத்திருக்கும் சிறு சந்தோஷத்தையும் கொண்டாடியே தீர வேண்டும் என்று முடிவுசெய்துவிட்டார் போலும் புதுச்சேரியின் காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி. மகிழ்ச்சியான தருணங்களில் மற்றவர்களுக்கு இனிப்பை ஊட்டுவாரே தவிர மறந்தும்கூட தான் சாப்பிடமாட்டார் நாராயணசாமி. ஆனால், ஆட்சிக்கே ஆபத்து எனும் சூழலிலும், துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி நீக்கப்பட்ட செய்தியைக் கொண்டாடியபோது ஒன்றல்ல, இரண்டல்ல... நான்கு லட்டுகளைச் சுவைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் நாராயணசாமி.

ஐந்தாண்டு காலமாக நாராயணசாமிக்கு நெருக்கடி கொடுத்துவந்த கிரண் பேடி நீக்கப்பட்டிருக்கிறார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்குப் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு தரப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன?

அடுத்தடுத்து காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பதவி விலகியுள்ள நிலையில், இனி புதுவை அரசியலில் என்ன நடக்கும்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in