கண்டுகொள்ளாத காங்கிரஸ்... கைகொடுக்கும் திமுக!- முரசை முந்தும் அரசர்...

கண்டுகொள்ளாத காங்கிரஸ்... கைகொடுக்கும் திமுக!- முரசை முந்தும் அரசர்...

கரு.முத்து

காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் போட்டியிடுவதால் திருச்சி தொகுதிக்கு இந்த முறை நட்சத்திர அந்தஸ்து!

திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கிவிட்டாலும் யார் வேட்பாளர் என்பதில் அரசருக்கும் முன்னாள் எம்பி-யான அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிஸுக்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில் இந்த ரேஸில் அரசரே முந்தினார். இதனால் லூயிஸ் முகாம் அதிருப்தியில் உறைந்து கிடக்கிறது. “திருச்சி உனக்குத்தான்” என்று சொல்லி லூயிஸை முதலில் உற்சாகப்படுத்தி களத்தில் இறக்கிவிட்டதே அரசர்தானாம். அவரும் இதை நம்பி சிலபல லட்சங்களை இறக்கி தேர்தல் ஆயத்தப் பணிகளைக் கவனித்தார். இடையில் என்ன அரசியல் நடந்ததோ தெரியவில்லை. அரசரே திருச்சியின் வேட்பாளராகிவிட்டார். இந்த அரசியல் சித்து விளையாட்டைத்தான் சகிக்க முடியாமல் தகிக்கிறார் லூயிஸ்!

இந்தப் போராட்டத்தால், அரசர் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நாள் வரை லூயிஸ், திருச்சிக்கு வரவில்லை. அவர் வராததால் திருச்சி காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகளும் ஜகா வாங்கினார்கள். இதனால் திமுகவினரை உடன் அழைத்துச் சென்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் அரசர். இருந்தாலும் “லூயிஸின் இந்த மனக் கசப்பை எல்லாம் மறக்கவைத்து அவரைக் களத்துக்கு கொண்டுவரும் உத்தி அரசருக்குத் தெரியும்” என்கிறது அரசர் முகாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in