
ஆட்சிக்கு எதிராக ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அதிமுக சரித்திரத்தில் நீண்ட நாட்களாகத் தொலைந்து போயிருந்த பல நல்ல காட்சிகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. சற்றே கூடுதலாக இருந்தாலும் அமைச்சர்கள் எல்லாம் தங்கள் மனதில் பட்டதைப் பளிச்செனப் பேசுகிறார்கள். மு.க.அழகிரியோடு அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக போலியான ஒரு போட்டோவை ஜெயலலிதாவுக்கு அனுப்பி அதன் மூலம் அவரது அமைச்சர் பதவிக்கே வேட்டுவைத்த வரலாறு அதிமுகவுக்கு உண்டு. அத்தகைய அநாகரிகம் எல்லாம் இப்போது போயே போச்! இப்போது திமுகவினர் இல்ல விசேஷங்களில் அதிமுக தலைகளையும் அதிகம் பார்க்க முடிகிறது.
இப்போது இன்னொன்றும் நடந்திருக்கிறது. கடந்த 3-ம் தேதி, சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் மீது பேசிய முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் கருணாநிதிக்கு சூட்டிய புகழாராமும் அவரது அருமை பெருமைகளை அடுக்கிய விதமும் திமுகவினரையும் திகைக்க வைத்துவிட்டது. இதுவரை அதிமுகவினரால் ‘கருணாநிதி’ என்று மட்டுமே விளிக்கப்பட்ட தங்களது தலைவரை ‘கலைஞர்’ என்று அதிமுக முதல்வரே விளித்தது திமுகவினருக்கு மட்டுமல்ல... யாருக்குமே வியப்புதான்!. “இத்தனை நாளும் இந்த அவை நாகரிகம் எல்லாம் எங்கே போனது?” இந்தக் கேள்வியோடு அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வனிடம் பேசினேன்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.