காமதேனு
தயாரிப்பாளரின் மகளாக இருந்தாலும் தன் நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை கீர்த்தி பாண்டியன்.
சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் உருவ கேலிகளைச் சந்தித்தார்.
அதற்கெல்லாம் தனது நடிப்புத் திறமையால் பதில் கொடுத்தார்.
நடிகர் அசோக்செல்வனுடன் இவருக்கு காதல் திருமணம் நடந்த போதும் இந்த உருவ கேலியை சந்தித்தார் கீர்த்தி.
உலகிலேயே அழகிய பெண் இவர்தான் எனச் சொல்லி அந்த நெகடிவ் கமெண்டுக்கு பதிலடி கொடுத்தார் அசோக்.
இப்போது தாய்லாந்தில் ரிலாக்ஸ் டிரிப்பில் உள்ளது இந்த ஜோடி.
வரும் 18ஆம் தேதி கீர்த்தி பிறந்தநாளுக்காக செம சர்ப்ரைஸ் பிளான் செய்திருக்கிறாராம் அசோக். அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள் கீர்த்தி!