சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நாளை (மே 1) முதல் ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அறிவிக்கப்படும். அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (மே 1) முதல் ஜூன் 2-ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளைத் தாக்கல் செய்தால் விசாரிப்பதற்கு வசதியாக விடுமுறை கால நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை என இரு உயர் நீதிமன்றங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விடுமுறை கால அவசர வழக்குகளை வாரந்தோறும், திங்கள் கிழமை மற்றும் செவ்வாய் கிழமை ஆகிய நாட்களில் தாக்கல் செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிவித்துள்ளார்.