தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது 
மாநிலம்

தங்கம் சரவன் ரூ.53,000 யைக் கடந்தது... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

காமதேனு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து மீண்டும் 53 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த மார்ச் 1ம் தேதி முதல் தொடர்ந்து ஏறு முகத்தில் இருந்து வருகிறது. அதிகபட்ச உச்சமாக 55 ஆயிரம் ரூபாய் வரை தங்கத்தின் விலை சவரனுக்கு எட்டியிருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்து வந்ததால், 53 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் குறைந்து இருந்தது.

தங்கம்

இன்று காலை நேர வர்த்தகம் துவங்கியது முதலே தங்கத்தின் மீதான முதலீடுகள் கணிசமாக உயர்ந்தது. இதன் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 6,640 ரூபாயாக உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 53 ஆயிரத்து 120 ரூபாயாக உயர்ந்துள்ளது.

வெள்ளி

வெள்ளியின் விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி நேற்று 87 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் உயர்ந்து, 88 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 1,000 ரூபாய் உயர்ந்து 88 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT