புயல் 
மாநிலம்

கனமழை, சூறாவளி அச்சத்தை ஏற்படுத்தும் ரெமல் புயல்... மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!

கவிதா குமார்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ரெமல் புயலாக இன்று உருவாகிறது. எனவே மே 26-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மழைக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழையும் ஆரம்பமாகி உள்ளது, இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்

அந்த அறிக்கையில், " தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகிவிட்டது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறும். இது தீவிர புயலாக மாறும். இந்த தீவிர புயலுக்கு 'ரெமல்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இது மே 26-ம் தேதி வங்கதேசத்தை கடக்கும். எனவே, வரும் 26- ம் தேதி வரை மீனவர்கள் சம்பந்தப்பட்ட கடலுக்குச் செல்ல வேண்டாம். அது போல் மக்களும் நீர் வீழ்ச்சி, மலைப்பிரதேசங்கள் கொண்ட இடங்களுக்குச் செல்ல வேண்டாம்.

வடகிழக்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மே 25-ம் தேதி மாலை நிலவும். இதனால் குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மே 26-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

அதேபோல, மேலும் மத்திய வங்கக் கடலின் மத்திய பகுதிகள், தெற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் மே 25-ம் தேதி வரை அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.

குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வரும் 26-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். அதேபோல, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் மே 25-ம் தேதி வரை அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்" என்று வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT