தமிழக மீனவர்கள் 
மாநிலம்

இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது... தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!

காமதேனு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 19 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள்

மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. ஆனாலும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கிறது.

தமிழக மீனவர்கள்

இந்நிலையில், கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 19 பேரை கைது செய்தனர். அத்துடன் மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விசாரணைக்காக யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காரை நகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மீனவர்கள் 19 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நடுக்கடலில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை கடற்படையால் மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT