ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் நட்பு ரீதியாக நடைபெற்ற போட்டி ஒன்றில், நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுடன், கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் கிரிக்கெட் விளையாடிய நிகழ்ச்சி ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் பந்து வீச்சாளராக அறிமுகமான ஸ்டீவ் ஸ்மித் தனது அபாரமான திறமையால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரர் என்ற நிலையை அடைந்தார். 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஸ்மித், 9,514 ரன்கள் விளாசியுள்ளார். இதில் 4 இரட்டை சதங்கள், 32 சதங்கள், 40 அரை சதங்கள் ஆகியவை அடங்கும். அவரது சராசரி 58.01 என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் டெஸ்ட் போட்டிகளில் பத்தாயிரம் ரன்களை அவர் தொட இருக்கிறார்.
இதேபோல் டென்னிஸ் என்றவுடன் நினைவுக்கு வரும் பெயர்களில் ஒன்று நோவாக் ஜோகோவிச் ஆவார். செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் வீரரான இவர், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் உட்பட 98 தனிநபர் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இதனிடையே ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நாளை துவங்கி ஜனவரி 28ம் தேதி வரை ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் ஜோகோவிச் பங்கேற்க உள்ளார்.
இந்த போட்டிகளை பிரபலப்படுத்தும் வகையில் நட்பு ரீதியான போட்டி ஒன்று நடத்தப்பட்டது. இதில் ஜோகோவிச்சும், ஸ்டீவ் ஸ்மித்தும் பங்கேற்று விளையாடினர். ஜோகோவிச் வீசிய சர்வீஸை மிகத் திறமையாக எதிர்கொண்ட ஸ்மித், சிறப்பாக விளையாடி அசத்தினார். இதனைக் கண்ட ரசிகர்கள் ஆர்ப்பரித்ததை அடுத்து ஜோக்கோவிச் அவரை தலைவணங்கி பாராட்டினார்.
இதைத்தொடர்ந்து ஜோகோவிச் கிரிக்கெட் விளையாடினார். ஆனால் அவரால் கிரிக்கெட் பேட் கொண்டு பந்தை அடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து விளையாட்டாக அடுத்த பந்தை தனது டென்னிஸ் பேட்டில் எதிர்கொண்ட அவர், அதனை ரசிகர்களை நோக்கி அடித்து விலாசினார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இருவரும் வெவ்வேறு விளையாட்டு துறைகளில் சிறந்த ஆட்டக்காரர்கள் என்று பெயர் எடுத்த நிலையில், நகைச்சுவையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை நெட்டிசன்கள் வேகமாக பரப்பி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
நடிகர் விஜயகாந்த் நினைவிடத்தில் கதறியழுத நடிகை ராதா!
மொத்தமும் போச்சு... ஓ.பீ.எஸ். மேல்முறையீட்டு வழக்கில் பரபரப்பு தீர்ப்பு: அதிமுகவினர் குஷி!
பகீர்... நடுரோட்டில் தலைமைக் காவலருக்கு அரிவாள் வெட்டு!
லெஸ்பியன் ஜோடிக்கு கோயிலில் நடந்த திருமணம்!
இனி பி.எட் படிப்புகளுக்கு தடை; மத்திய கல்வி அமைச்சகம் அதிரடி!