முதல்வர் ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி  திமுகவினர் வன்முறை வெறியாட்டம்: வீடியோ வெளியிட்டு முதல்வரை சாடும் எடப்பாடி பழனிசாமி
அரசியல்

காவல்நிலையத்தில் திமுகவினர் வன்முறை வெறியாட்டம்: வீடியோ வெளியிட்டு முதல்வரை சாடும் எடப்பாடி பழனிசாமி

காமதேனு

திருச்சியில் திமுகவினர் காவல் நிலையத்திற்குள் புகுந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வண்ணம், காவல்நிலையத்திற்குள்ளேயே புகுந்து நேரடியாக வன்முறை வெறியாட்டம் நடத்தும் அராஜக திமுகவினரால், இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இந்த அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தமிழகத்துக்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு ஆபத்தாகவும் இருப்பதை மக்கள் உணரத் துவங்கியுள்ளனர். காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT