திருமாவளவன்
திருமாவளவன் 
அரசியல்

‘தமிழர் விரோத ஆளுநர் பதவி விலகுவதே சரியாகும்’ - திருமாவளவன் கோபம்

காமதேனு

ஆறு பேர் விடுதலை தமிழர் விரோத ஆளுநர் பதவி விலகுவதே சரியாகும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ஆறு பேர் விடுதலை ஆறுதல் அளிக்கிறது. மிகவும் காலம் தாழ்ந்த விடுதலை எனினும் நீண்டகால ஏக்கம் தணிக்கிறது.

ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் ஓயாத போராட்டத்திற்குக் கிடைத்த உன்னத வெற்றி.

தமிழர் விரோத ஆளுநருக்கு தக்கபாடம் புகட்டியுள்ள தனிப்பெரும் தீர்ப்பு. ஆளுநர் பதவி விலகுவதே சரியாகும்” என தெரிவித்துள்ளார்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் எழுவர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காது இழுத்தடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் சட்டப் போராட்டங்களின் முடிவாக, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை மே 18 அன்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டது.

பேரறிவாளன் விடுதலையை முன்னிறுத்தி நளினி, ரவிச்சந்திரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தையும் பின்னர் மேல்முறையீடாக உச்ச நீதிமன்றத்தையும் நாடினர். அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலித்த உச்ச நீதிமன்றம் ‘பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இவர்களுக்கும் பொருந்தும்’ என்ற முடிவுக்கு வந்தது. முன்னதாக இடையீட்டு மனு மூலம் சாந்தன், ஹரிஹரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரும், நளினி - ரவிச்சந்திரன் தொடுத்த மேல்முறையீட்டில் இணைந்து கொண்டனர்.

விசாரணை முடிந்த நிலையில், மனுதாரர்கள் 6 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

SCROLL FOR NEXT