ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ்
ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் ’சுங்கச்சாவடிகளை அகற்ற அரசு நீதிமன்றம் சென்றிருக்க வேண்டும்’ - அன்புமணி ராமதாஸ் கருத்து!
அரசியல்

’சுங்கச்சாவடிகளை அகற்ற அரசு நீதிமன்றம் சென்றிருக்க வேண்டும்’ -அன்புமணி ஆதங்கம்!

காமதேனு

‘60 கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்ற வகையில் 37 சுங்கச் சாவடிகளை அகற்றக் கோரி தமிழக அரசு நீதிமன்றம் சென்று இருக்க வேண்டும்’ என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று அன்னைத் தமிழில் அழகிய சொற்கள் அடங்கிய தமிழ்ப் பெயர் பதாகைகள், குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கான தமிழ்ப் பெயர்கள் கொண்ட பதாகைகள் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், வன்னியர் சங்கத்தலைவர் பு.தா.அருள்மொழி, மாநிலப் பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர், மாவட்ட தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற்றது. அப்போது தமிழ்ப் பெயர்ப் பலகைகளை அமைக்க வலியுறுத்தும் துண்டறிக்கைகளை அந்தந்த பகுதியில் வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘’தமிழ்நாடு அரசுக்குத் தெரிவிக்காமல் லிக்னைட் எடுப்பதற்காகக் கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியிலும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியிலும் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த வடசேரி பகுதிகளும் மத்திய அரசு சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

அதற்காக அந்தப் பகுதிகளில் 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ஏக்கர் வரை நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இது குறித்து தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர், வேளாண் துறை அமைச்சர் ஆகியோருக்கு தெரியவில்லை. நெய்வேலி நிலக்கரி எடுத்தால் அந்தப் பகுதியில் நீர்நிலைகள், மாசு வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கடலூர் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லாது, என்எல்சி நிர்வாகத்துக்குத் துணையாக நிற்கிறார். மேலும் விவசாயிகள் கூட்டத்தில் என்எல்சி குறித்துப் பேசக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். அவர் ஆட்சியராகப் பதவி வகிக்கத் தகுதி இல்லாதவர்.

சுங்கச் சாவடி கட்டண உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது 60 கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி; மற்றவைகள் அகற்றப்படும் என்ற மத்திய அரசு அறிவிப்பின்படி பார்த்தால்  37  சுங்கச் சாவடிகளை அகற்றி இருக்க வேண்டும். போக்குவரத்துத்துறை அமைச்சர், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆகியோர் நீதிமன்றத்திற்குச் சென்று உடனடியாக 37 சுங்கச்சாவடிகளை எடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும்.

இந்த ஆண்டு வெப்பமான ஆண்டு அதுக்கு ஏற்ற முறையில் மக்களுக்கு உதவு வகையில் திட்டங்களைத் தீட்ட வேண்டும். கோவிட் பரவலைக் குறித்துப் பயப்படத் தேவையில்லை. கடந்த 10 மாதங்களில் 98 சதவீதம் மக்களுக்கு ஒமிக்கிறான் தொற்று பரவியதால் மக்கள் மத்தியில் எதிர்ப்புச் சக்தி உள்ளது. 

ஆசிரியர்கள், பேராசிரியர்கள் காலியிடங்களை நிரப்புவதற்கு அறிக்கை அளித்துள்ளேன் விரைவில் நிரப்புவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் விவாதிப்பார்கள் . தமிழகத்தில் மது, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் அதிகமாகப் புழங்குவதால் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போதையால் தான் அதிகமாகக் குற்றங்கள் நடைபெறுகிறது’’ என்றார்.

SCROLL FOR NEXT