அரசியல்

பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு முக்கியமான பதவி - ஓபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

காமதேனு

பண்ருட்டி ராமச்சந்திரனை அரசியல் ஆலோசகராக நியமித்து ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதிமுக தலைமை குறித்த மோதல் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே பூதாகரமாக வெடித்து வருகிறது. இதுகுறித்த வழக்குகள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன. இந்த சூழலில் இரு தரப்புமே நிர்வாகிகள் நியமனம், நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதில், “ அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ச.இராமச்சந்திரன் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். ஒபிஎஸ்சின் இந்த திடீர் நியமனம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டி ராமச்சந்திரன் சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ்சை சந்தித்தார். சில வாரங்களுக்கு முன்பு சசிகலாவும் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்திருந்தார்.

SCROLL FOR NEXT