அழகுமுத்துப் பாண்டியன்
அழகுமுத்துப் பாண்டியன்  
அரசியல்

நல்லகண்ணுவின் மருமகன் காலமானார்

காமதேனு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணுவின் மருமகனும், தூத்துக்குடி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளருமான அழகுமுத்துப் பாண்டியன் உடல்நலக்குறைவால் இன்று உயிர் இழந்தார்.

தூத்துக்குடி மாவட்ட இ.கம்யூனிஸ்ட் செயலாளராக இருந்தவர் அழகுமுத்துப் பாண்டியன். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுவின் மூத்த மகளின் கணவர் ஆவார். தூத்துக்குடி மாவட்டத்தில் இடதுசாரி இயக்கத்தின் சார்பில் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களையும் இவர் முன்னெடுத்து வந்தார். இதனால் அடித்தட்டு மக்களோடு அழகுமுத்துப் பாண்டியனுக்கு நெருங்கியத் தொடர்பு இருந்தது. பல்வேறு மக்கள் நலப் போராட்டங்களுக்காக பலமுறை கைதும் செய்யப்பட்டிருக்கிறார்.

கடந்த சில தினங்களாக அழகுமுத்துப் பாண்டியன் உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிர் இழந்தார்.

SCROLL FOR NEXT