அரசியல்

`நீதிபதி உத்தரவாதம் கொடுக்கச் சொன்னார், தடை விதிக்கவில்லை'- பொதுச் செயலாளர் அறிவிப்பு குறித்து ஈபிஎஸ்

காமதேனு

"அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தடை விதிக்கப்படவில்லை. நீதியரசர் உத்தரவாதம்தான் கொடுக்கச் சொன்னார்" என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை இன்று தென்காசி வடக்கு மாவட்ட அமமுக முன்னாள் செயலாளர் அய்யாதுரை பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று சந்தித்து அதிமுகவில் இணைந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமியிடம், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், விசாரணை முடியும் வரை பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்று உத்தரவாதம் கொடுக்க நீதியரசர் கூறியதாகவும் தடை பிறப்பிக்கப்படவில்லை என்றும் கூறினார். மேலும் பொதுச் செயலாளர் அறிவிப்பு குறித்து நாங்கள் எதுவும் அறிவிப்பு வெளியிடவில்லை என்றும் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT