ஓபிஎஸ்
ஓபிஎஸ் 
அரசியல்

சமூக நீதி கூட்டமைப்பில் இணைய அதிமுக விரும்பவில்லை!

காமதேனு

“சமூக நீதி கூட்டமைப்பில் இணைய அதிமுக விரும்பவில்லை” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 37 தலைவர்களுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், சமூக நீதி கூட்டமைப்பில் இணைய அதிமுக விரும்பவில்லை என மு.க ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “அரசியல் ஆதாயத்துக்காக உருவாக்கப்பட்ட சமூக நீதி கூட்டமைப்பில் இணைய அதிமுக விரும்பவில்லை. விவாதிக்காமல் அமைப்பு ஏற்படுத்திவிட்டு, அதில் பிரதிநிதியை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு முரணானது. சமூக நீதி கூட்டமைப்பில் நேரத்தை வீணடிப்பதை தவிர்த்துவிட்டு நீட் போன்ற மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT