செட்டிநாட்டு அரண்மனையில் நட்டா...
செட்டிநாட்டு அரண்மனையில் நட்டா... 
அரசியல்

மோடியும் பிள்ளையார்பட்டிக்கு வருவார்!

காமதேனு

கடந்த வாரத்தில் இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டத்தில் முகாமிட்டிருந்த பாஜக தேசிய தலைவர் நட்டா, ப.சிதம்பரத்தின் பாட்டி வீடான செட்டிநாட்டு அரண்மனைக்கும் விசிட் அடித்தார். செட்டிநாட்டுப் பகுதியில் உள்ள இன்னும் சில சுற்றுலா தலங்களையும் வட்டமடித்த நட்டா, அப்படியே பிள்ளையார்பட்டிக்கும் ஒரு விசிட் கொடுத்தாராம். பிள்ளையார்பட்டி விநாயகரை பிரம்மிப்புடன் வணங்கிய நட்டா, “மும்பையில் இருக்கிற சித்தி விநாயகர் வடக்கில் எந்தளவுக்குப் பிரபலமோ அதே அளவுக்கு பிள்ளையார்பட்டி விநாயகரும் அங்கே பிரபலம். அங்கே பல இடங்களில் இந்த விநாயகர் படத்தை நான் பார்த்திருக்கிறேன்” என்று சொல்லி ஆச்சரியப்பட்டவர், “இந்தக் கோயிலுக்கு மோடி ஜி வந்திருக்கிறாரா?” என்று உடன் வந்த உள்ளூர் பாஜக நிர்வாகிகளிடம் கேட்டாராம். அவர்கள், “இல்லை” என்று சொன்னதும், “பார்லிமென்ட் எலெக் ஷனுக்குள் ஜியை இங்கே அழைத்துவர ஒரு புரொகிராம் போடுவோம்” என்று சொல்லிவிட்டுச் சென்றாராம் நட்டா.

SCROLL FOR NEXT