ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார் ’திட்டமிட்டு குழப்பதை ஏற்படுத்தியுள்ளார்’ - சபாநாயகரை சாடும் ஆர்.பி.உதயகுமார்..!
அரசியல்

பேரவையில் ஓபிஎஸ்சை பேசவிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறார்: சபாநாயகரை சாடும் ஆர்.பி.உதயகுமார்

காமதேனு

சட்டப்பேரவையில் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சபாநாயகர் ஓ.பன்னீர்செல்வத்தை பேச வைத்துள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் உள்ள தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’ சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது யார் பேச வேண்டும் என்பதை எதிர்க்கட்சி கொறடா முடிவு செய்து அறிவிப்பார். அதன் அடிப்படையில் தான் இந்த மசோதா தொடர்பாக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் பேசினார்.

திட்டமிட்டு ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பேச அனுமதித்துள்ளார் சபாநாயகர். சட்டப்பேரவை மரபில் இந்த மாதிரி நடந்ததே கிடையாது. பேரவையைப் பொறுத்தவரை தோழமைக் கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் ஆனால், ஒரே கட்சிக்கு பலமுறை வாய்ப்பு என்பதெல்லாம் கொடுத்து கிடையாது. சபை மரபுக்கு மீறிய செயல் இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது ‘’ என்றார்.

SCROLL FOR NEXT