அரசியல்

கோத்தபய ராஜபக்ச ஆக.24-ல் இலங்கை திரும்புகிறார்

காமதேனு

இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச பாங்காங்கிலிருந்து ஆக.24-ம் தேதி நாடு திரும்புவார் என்று அவரது உறவினர் கூறியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தினர். இதையடுத்து மக்கள் போராட்டம் புரட்சியாக வெடித்தது. அதிபர் மாளிகைக்குள் புகுந்து பொருட்களை அடித்து துவம்சம் செய்தனர். இந்த நிலையில் ரகசிய வழியாக கோத்தபய ராஜபக்ச தனது குடும்பத்தாருடன் ஜூலை 13-ம் தேதி மாலத்தீவிற்குத் தப்பிச் சென்றார்.
அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். அங்கு அவருக்கான விசா’ காலம் முடிந்ததால் ஆக.11-ம் தேதி தாய்லாந்து சென்ற அவர் பாங்காங் நகரில் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார்.

இந்த சூழலில் அவரது உறவினரான வீரதுங்க கூறுகையில், " கோத்தபய ராஜபக்சே என்னுடன் போனில் பேசினார். ஆக. 24-ம் தேதி அவர் இலங்கை திரும்புவார். அவரால் மீண்டும் இலங்கை மக்களுக்கு சேவை செய்ய முடியும்" என்றார்.

SCROLL FOR NEXT