அரசியல்

போக்குவரத்து ஊழியர்களுக்கு பஞ்சப்படி வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

காமதேனு

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான பஞ்சப்படியை விரைந்து வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து அதிமுக அரசால் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. போக்குவரத்துக் கழகங்களின் கடன் மற்றும் நிதி நெருக்கடியை காரணம் காட்டி காலம் தாழ்த்திக் கொண்டிருந்தார்கள்.

தற்போது திமுக தலைமையிலான ஆட்சியில்,போக்குவரத்துத் துறை அமைச்சர், தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசி இறுதியாக கடந்த 24.08. 2022 அன்று ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதற்காக தமிழக முதல்வர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பஞ்சப்படி 2015-ம் ஆண்டிலிருந்து தரப்படவில்லை. எனவே தொழிலாளர்களின் சிரமங்களைப் போக்குவதற்கு ஏதுவாக பஞ்சப்படி எனும் டிஏவை விரைவில் அளித்திடுமாறு தமிழக அசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT