ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா: அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
அரசியல்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா: அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

காமதேனு

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். காங்கிரஸ் மூத்த தலைவரான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT