அரசியல்

ப.சிதம்பரத்தின் மகன் வீடு, அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை!

காமதேனு

முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் டெல்லி, மும்பை, சென்னை உட்பட 7 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT