வி.கே. சசிகலா
வி.கே. சசிகலா 
அரசியல்

என் நிழலைக்கூட பாஜகவால் நெருங்க முடியாது: சசிகலா பரபரப்பு பேட்டி

காமதேனு

பாஜகவால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும், என் நிழலைக் கூட பாஜகவால் நெருங்க முடியாது என்றும் சசிகலா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மன்னார்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’’இரட்டை இலை சின்னத்தை எதுவும் செய்ய முடியாது. அந்த சின்னத்தை எதுவும் செய்ய விடமாட்டேன். நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலைக்கு ஆபத்து வராது. பாஜகவால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. என் நிழலைக் கூட அவர்களால் நெருங்க முடியாது" என்றார். யாருக்கு இரட்டை இலை கிடைக்கும் என்ற கேள்விக்கு, "ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் என்ன தீர்ப்பு வருகிறது என்று பார்ப்போம்" என்று பதிலளித்தார்.

அதிமுக பிளவுப்பட்டு போனதற்கு பாஜகதான் காரணமா? என கேள்விக்கு " அதற்கு, யாரையும் குறை சொல்லமுடியாது. நாம் என்ன கைக்குழந்தையா, நம்மை அவர்கள் கட்டுப்படுத்த? ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகளை இணைக்க நான் முயற்சிகளை எடுத்து வருகிறேன். தேர்தலின்போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று ஒரு பெட்டி நிறைய மனுக்களை வாங்கி பூட்டி, சாவி என்னிடம் இருக்கும். ஆட்சிக்கு வந்ததும் இதனைத் திறந்து குறைகளைத் தீர்ப்பேன் என்றார். ஆனால், இன்னும் அந்த பெட்டி திறக்கப்படவே இல்லை. ஒருவேளை சாவி தொலைந்து போய்விட்டது போல" என்று கூறினார்.

SCROLL FOR NEXT