ஓபிஎஸ்
ஓபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: ஓபிஎஸ் திடீர் வழக்கு
அரசியல்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: ஓபிஎஸ் திடீர் வழக்கு

காமதேனு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைக்கோரி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தல் தடைக்கோரி மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் ஆகியோர் ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் 24-ம் தேதி வரை பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதித்து வழக்கு விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்தநிலையில், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைக்கோரி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பி.எஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானதாக கூறவில்லை எனவும் அதனை நிலுவையில் உள்ள மனுவில் தான் முடிவு செய்ய முடியும் எனவும் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் இந்த மனுவையும் விசாரிக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆஜராகி நீதிபதி குமரேஷ் பாபு முன்பு முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வரும் 22-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக ஒப்புதல் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT