கொள்ளை முயற்சி நடந்த கனரா வங்கி ஏடிஎம் மையம் 
செய்திகள்

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி... போலீஸை கத்தியால் குத்திய மர்ம நபர் கைது!

கே.காமராஜ்

தூத்துக்குடியில் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடிக்க முயற்சித்தவரை போலீஸ்காரர் பிடிக்க முயற்சித்ததால், போலீஸாரைக் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மத்திய பகுதியில் தெற்கு சம்மந்தமூர்த்தி தெருவில் கனரா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக தென்பாக்கம் காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார். ஏடிஎம் இயந்திரத்தில் மர்ம நபர் ஒருவர் நின்றிருப்பதை கண்ட அவர், உடனடியாக இது தொடர்பாக மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

கொள்ளை முயற்சி நடந்த பகுதி

தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவரை பிடிக்க அவர் முயன்றுள்ளார். அப்போது அந்த கொள்ளையன், தான் கையில் வைத்திருந்த கத்தியால் காவலரை தாக்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த மர்ம நபரை, போலீஸ்காரர் மடக்கிப் பிடித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மத்திய பாகம் காவல் நிலைய போலீஸார் கொலை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் காயம் அடைந்த காவலரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையம்

இதனிடையே பிடிபட்ட நபரிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவரது பெயர் செந்தில் என்று மட்டும் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது போன்ற தகவல்களை அவள் சொல்ல மறுப்பதால் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் அவர் உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்டவர் தானா என்பதை கண்டறிவதற்காக அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள போலீஸார் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

நாளை குமரியில் மோடியின் தியான நிகழ்ச்சி நடக்குமா?!காங்கிரஸ் கட்சியால் பெரும் பரபரப்பு!

பெண்களே உஷார்... மளிகை கடையில் பொருள் வாங்குவது போல் வந்து நகையை பறித்துச் சென்ற இளைஞர்

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வருகை... கடலோர காவல்படை கப்பல்கள் தீவிர ரோந்துப்பணி

பகீர்... அரசு பள்ளிக்குள் மாணவிக்கு நடந்த அக்கிரமம்: கர்ப்பமாக்கிய தலைமை ஆசிரியர் கைது!

பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் எஸ்ஐடி விடிய விடிய சோதனை... கட்டில், தலையணைகள் பறிமுதல்!

SCROLL FOR NEXT