குற்றவாளியை சுற்றி வளைத்த போலீஸார். 
செய்திகள்

பகீர்... அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்து 5 பேரை சுட்டுக்கொன்ற கொலையாளி... அடுத்து நிகழ்ந்த விபரீதம்!

கவிதா குமார்

அமெரிக்காவில் திடீரென அடுக்குமாடி குடியிருப்புகளில் நுழைந்து 5 பொதுமக்களைச் சுட்டுக் கொலை செய்தவர் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வணிக மையங்கள், பள்ளிகள், சாலைகள், வீடுகளில் நடக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். சட்ட விரோத துப்பாக்கி விற்பனையும் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், லாஸ் வேகாஸில் அடுக்குமாடி குடியிருப்புகளில் புகுந்து மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு 5 பேரைக் கொன்ற சம்பவம் அமெரிக்காவில் மீண்டும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்திற்கு விரைந்த போலீஸார்.

அமெரிக்காவில் வடக்கு லாஸ் வேகாஸில் உள்ள காசா நோர்டே டிரைவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் சம்பவ இடத்தை அடைந்ததும், 40 வயதைக் கடந்த ஒரு பெண்ணும், 50 வயதைக் கடந்த மற்றொரு பெண்ணும் குண்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டனர். ஆனால், அவர்கள் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

மேலும் மூன்று பேர் அருகிலுள்ள மற்றொரு அடுக்குமாடி வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டனர். 20 வயதுக்கு இடைப்பட்ட இரண்டு பெண்கள் மற்றும் 20 வயதை கடந்த ஒரு ஆண் என மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஐந்து பேர் இறந்த நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 வயது சிறுமி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூடு நடத்திய எரிக் ஆடம்ஸ்(47) என்பவரை போலீஸார் இரவு முழுவதும் தேடி அலைந்தனர். அவர் ஆடம்ஸ் ஈஸ்ட் லேக் மீட் பவுல்வார்டில் உள்ள ஒரு உள்ளூர் வணிக தளத்தில் இருப்பதாக போ தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்றனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தி தற்கொலை செய்து கொண்ட எரிக் ஆடம்ஸ்

அவர்களைப் பார்த்ததும் எரிக் ஆடம்ஸ் தப்பிக்க முயன்றனர். ஆனால், துப்பாக்கியைப் போட்டு விட்டு சரணடையும்படி போலீஸார் அவரை எச்சரித்தனர். ஆனால், அதைக் கேட்காமல் எரிக் ஆடம்ஸ் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். எதற்காக அவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT