மரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்ட இளைஞர் 
செய்திகள்

காதல் விவகாரத்தில் பயங்கரம்.... இளைஞரை கொன்று தூக்கில் தொங்க விட்ட கொடூரம்!

கவிதா குமார்

சிக்கபள்ளாபூரில் இளைஞர் கொலை செய்யப்பட்டு மரத்தில் தொங்க விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், சிக்கபள்ளாபூர் மாவட்டம், கவுரிபிதனூர் தாலுகா சேமேஷெட்டிஹள்ளி கிராமத்தின் புறநகர் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் உடல் இன்று காலை காணப்பட்டது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், கவுரிபிதனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த இடத்திற்கு போலீஸார் விரைந்து சென்றனர். மரத்தில் தூக்கில் தொங்கிய இளைஞன் கையில் லட்சுமி என்ற பச்சை குத்தப்பட்டிருந்தது. காதல் விவகாரம் காரணமாக அவரை யாராவது கொலை செய்து மரத்தில் தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

மரத்தில் இருந்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். மேலும், அந்த பகுதியில் சோதனை நடத்தினர். ஆனால், சந்தேகப்படும்படி எந்தபொருளும் கிடைக்கவில்லை. கொலை செய்யப்பட்டவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளைஞரை கொலை செய்து மரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT