'கல்கி 2898 ஏடி’ 
செய்திகள்

'கல்கி 2898 ஏடி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி... வெளியான சூப்பர் தகவல்!

ச.ஆனந்தப்பிரியா

'கல்கி 2898 ஏடி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பல புராணங்களின் கலவையாக இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

புராணங்கள் மற்றும் எதிர்கால அறிவியலின் கலவையாக 'கல்கி 2898 ஏடி’ திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த மாதம் 27ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். நடிகர்கள் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்ளிட்டப் பல பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர்.

‘கல்கி 2898 ஏடி’

படத்தின் கதை மகாபாரத்தில் இருந்தே தொடங்குவதாக இயக்குநர் நாக் அஸ்வின் முன்பு சொல்லி இருந்தார். “மகாபாரதக் காலக்கட்டத்தில் தொடங்கும் இந்தக் கதை அதன் பிறகு 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களைப் பேசுகிறது. அந்த உலகம் எப்படி இருக்கும் என்பதை கற்பனையாக உருவாக்க முயன்றுள்ளோம். இதை முடிந்த வரை இந்திய பின்னணியிலேயே உருவாக்கியுள்ளோம்” என்றார்.

படத்தின் இன்னொரு சர்ப்ரைஸாக நடிகை ஷோபனா ‘மரியம்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதையும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்திய புராணக் கதையில் ’மரியம்’ என்ற கிறிஸ்துவ பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ஷோபானா நடித்திருப்பதால் எப்படியான கதாபாத்திரமாக இருக்கும் என்ற ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

படத்தின் கிளைமாக்ஸ் பல இந்திய புராணக்கதைகளின் கலவையாக இருக்கும். இது பிரமாண்டமாகவும் வசீகரிக்கும் வகையில் இருக்கும் எனப் படக்குழு கூறியுள்ளது. கடந்த கால இதிகாசங்களின் தொடர்ச்சியாக, முந்தைய யுகங்களின் போராட்டங்கள் மற்றும் போர்களின் உச்சக்கட்டத்தை வெளிப்படுத்தும் இறுதிப் போரைக் காட்சிப்படுத்தியுள்ளார் நாக் அஸ்வின். இந்த காவிய மோதல் ஒரு சகாப்தத்தின் முடிவையும் புதிய ஒன்றின் தொடக்கத்தையும் குறிக்கிறது.

SCROLL FOR NEXT