’எதிர்நீச்சல்’ சீரியல் நடிகர்கள் 
செய்திகள்

எங்களுக்கு எண்டே கிடையாது... ’எதிர்நீச்சல்’ சீரியல் நடிகர்களின் ரீயூனியன்!

ச.ஆனந்தப்பிரியா

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘எதிர்நீச்சல்’ சீரியல் கடந்த வாரத்தோடு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், எங்களுக்கு எண்டே கிடையாது என இந்த சீரியல் நடிகர்கள் ரீயூனியனில் சந்தித்துள்ளனர்.

’கோலங்கள்’ சீரியல் புகழ் திருச்செல்வம் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘எதிர்நீச்சல்’ சீரியல் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. 750 எபிசோட்களோடு இந்த சீரியல் கடந்த வாரத்தில் முடிவுக்கு வந்தது ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

’சீரியல் முடிஞ்சா என்ன...எங்களுக்கு எண்டே கிடையாது’ என இந்த சீரியல் நடிகர்கள் ரீயூனியன் செய்துள்ளனர். ’வாகை சூடிய எதிர்நீச்சல்’ என்ற பெயரில் கேப்ஷன் கொடுத்து 750 எபிசோட்ஸ் என்று குறிப்பிட்டு இந்த ஷீல்டைத் தனது சீரியல் குழுவுக்கு கொடுத்துள்ளார் இயக்குநர் திருச்செல்வம்.

சமீபத்தில் திருச்செல்வம் தனது மகள் பிரியதர்ஷினிக்குத் திருமணம் முடித்து வைத்தார். இப்போது ‘எதிர்நீச்சல்’ சீரியலும் முடிவுக்கு வந்துள்ளது. குட்டி பிரேக் எடுத்துக் கொண்டு சீக்கிரம் புதிய சீரியலை இதே நடிகர்களை வைத்து இயக்க வேண்டும் அல்லது இரண்டாவது பார்ட் வேண்டும் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT