மஞ்சிமா மோகன் 
செய்திகள்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்... வதந்தி குறித்து மனம் திறந்த நடிகை மஞ்சிமா மோகன்!

காமதேனு

”திருமணத்திற்கு முன்பே நான் கர்ப்பமாகி விட்டேன். எங்களது திருமணத்தில் எனது மாமனாருக்கு விருப்பமில்லை என்பது போன்ற வதந்திகள் கிளம்பியது” என நடிகை மஞ்சிமா மோகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டின் நட்சத்திர தம்பதி மஞ்சிமா மோகன் - கெளதம் கார்த்திக். இந்த ஜோடிக்கு கடந்த 2022ல் எளிய முறையில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பே மஞ்சிமா கர்ப்பமாக இருந்தார், நடிகர் கார்த்திக்கிற்கு திருமணத்தில் பெரிதாக விருப்பமில்லை என்று பரவிய வதந்திகள் குறித்து யூடியூப் தளம் ஒன்றின் பாட்காஸ்ட் பேட்டியில் பகிர்ந்துள்ளார் மஞ்சிமா.

மஞ்சிமா மோகன்

அதில் அவர் பேசியிருப்பதாவது, “எங்களது திருமணம் நடந்தபோது நிறைய வதந்திகளை சமூகவலைதளங்களில் பார்க்க முடிந்தது. அதாவது, நான் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானேன் என்றும், எனது மாமனாருக்கு திருமணத்தில் விருப்பமில்லை. அவரை நாங்கள் ஒருமுறைதான் அழைத்தோம் என்ற ரீதியில் பேசினார்கள். இது எங்கள் வீட்டு திருமணம். அப்படி இருக்கும் போது முறைப்படி அழைக்க வேண்டும் என்பது இல்லை. இதெல்லாமே கட்டுக் கதைகள்தான்.

இதில் சில வதந்திகள் எங்கள் குடும்ப உறுப்பினர்களை பாதித்தது என்பது உண்மைதான். பல வதந்திகளை நானும் சந்தித்திருக்கிறேன். திருமணத்திற்கு முன்பு இவை எல்லாம் என்னை பாதித்ததில்லை. ஆனால், திருமணத்திற்கு பின்பு நானும் ஒருக்கட்டத்தில் இதனால் வருத்தமடைந்தேன். குறிப்பாக, கெளதமிற்கு நான் ஏற்ற ஜோடியில்லை என்றெல்லாம் சொன்னார்கள்”.

கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் திருமணம்

”நீ எதைப் பற்றி கவலைப்படுகிறாய் என்று சொன்னால்தான் எனக்குத் தெரியும். எனக்கு உன்னைப் பற்றி எல்லாம் தெரியும் என்று நினைக்காதே! தம்பதிகள் ஓப்பனாக எல்லாவற்றையும் பேச வேண்டும்” என கெளதம் என்னிடம் கேட்டார். அவர் மிகவும் அன்பானவர். சமூகவலைதளங்களில் சிலர் ஜோடியாக புகைப்படங்கள் பதிவிடும்போது ‘எப்போதும் நாமும் இப்படி பதிவிடுவோம்?” என்று தோன்றும்.

ஆனால், எங்கள் திருமணம் பற்றி அறிவித்ததுமே எல்லாமே சோஷியல் மீடியாவில் உள்ளது. இப்போது நான் பேசும்போது கவனமாக இருக்கிறேன். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பேசவில்லை என்றால் ஜட்ஜ் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்” என்று பேசியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

எடியூரப்பா மீது போக்சோ புகார் அளித்த பெண் திடீர் மரணம்... கர்நாடகாவில் பரபரப்பு!

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்!

டெல்லியில் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்

தாய்லாந்தில் திருமணம்... சென்னையில் ரிசப்ஷன்... நடிகை வரலட்சுமியின் அடடே பிளான்!

மே 30-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

SCROLL FOR NEXT