தாய், தந்தையுடன் நடிகர் விஜய் 
செய்திகள்

நடிகர் விஜய் தாய் செய்த தரமான சம்பவம்... வைரலாகும் போட்டோ!

கவிதா குமார்

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர், முதன்முறையாக தனது பெற்றோரை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவரது தாய் ஷோபா சந்திரசேகர் வெளியிட்டுள்ளார்.

பிரபல நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அதைத் தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துள்ளார். கட்சியின் சார்பில் அவ்வப்போது ஆலோசனை கூட்டங்களை நடத்தி வந்த விஜய் தற்போது தனது அரசியல் வருகையை உறுதி செய்துள்ளார். வரும் 2026-ம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நடிகர் விஜய் ஆயத்தமாகி வருகிறார்.

நடிகர் விஜய்

இந்த அரசியல் கட்சியை தொடங்குவதற்கு முன்பே 234 தொகுதிகளிலும் தமிழ் புத்தாண்டு அன்று அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு தனது ரசிகர்களுக்கு உத்தரவிட்டார்.

நடிகர் விஜய்

அத்துடன் அன்னதானம், 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்குதல் என கட்சியினருக்கு உத்வேகமூட்டி வருகிறார். ஆனாலும், தனது தாய், தந்தையை விஜய் பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இடையே சில வருடங்களாகவே பேச்சுவார்த்தை இல்லை என்று கூறப்பட்டது. கடந்த ஆண்டு எஸ்.ஏ. சந்திரசேகர் அறுவை சிகிச்சை செய்து வீட்டில் ஓய்வெடுத்து வந்த போது விஜய் நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில் விஜய் தனது பெற்றோருடன் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர், முதன்முறையாக தனது பெற்றோரை சந்தித்து பேசியுள்ளார்.

விஜயின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தை விஜய் தாய் ஷோபா சந்திரசேகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT