கொலை செய்ப்பட்ட எல்லவ்வா நந்தி, தற்கொலை செய்த அன்னப்பா. 
செய்திகள்

மாட்டை விற்று மது குடித்ததால் தகராறு... மனைவியைக் கொலை செய்து விட்டு கணவன் தற்கொலை!

கவிதா குமார்

எருமை மாட்டை விற்று மது குடித்த கணவனை கண்டித்த மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதன் பின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெலகாவியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம் முதலகி தாலுகாவில் உள்ள புலகாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னப்பா. இவரது மனைவி எல்லவ்வா நந்தி(41). குடிப்பழக்கம் உள்ள அன்னப்பா, கிடைக்கும் பணத்தில் மது குடித்து வந்தார்.

மது

இந்த நிலையில், வீட்டில் கட்டியிருந்த எருமை மாட்டை அன்னப்பா நேற்று விற்றுள்ளார். அந்த பணத்தை முழுவதும் குடித்து அன்னப்பா காலி செய்துள்ளார். வயலில் வேலை செய்து கொண்டிருந்த எல்லவ்வா நந்தியிடம், எருமை மாட்டை விற்று விட்டதாக அன்னப்பா கூறியுள்ளார்.

அதற்கான பணத்தை அவர் கணவரிடம் கேட்டுள்ளார். அந்த பணத்தையெல்லாம் மது குடித்து காலி செய்து விட்டதாக அன்னப்பா கூறினார். இதனால் ஆத்திரமடைந்த எல்லவ்வா நந்தி, தனது கணவருடன் வாக்குவாதம் செய்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் வீட்டில் தகராறு நடந்துள்ளது.

அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றிய நிலையில், எல்லவ்வா நந்தியை சரமாரியாக அன்னப்பா தாக்கினார். இதில் சுருண்டு விழுந்தார். போதை தெளிந்த அன்னப்பா, மனைவியைப் பார்த்த போது தான், அவர் இறந்து போனது தெரிய வந்தது.

இதனால் அன்னப்பா அதிர்ச்சியடைந்தார். தன் மனைவியை அடித்துக் கொலை செய்து விட்டோமோ என்ற அச்சத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், இன்று காலை கணவன், மனைவி இருவரும் வீட்டை விட்டு வெளியே வராததால், அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது அன்னப்பா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அருகில் எல்லவ்வா நந்தி இறந்து கிடந்தார். இதுகுறித்து உடனடியாக அவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த காவல் துறையினர், கொலை செய்யப்பட்ட எல்லவ்வா உடலையும், தற்கொலை செய்த அன்னப்பா உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மது போதையில் மனைவியை கொலை செய்த கணவன், தற்கொலை செய்த சம்பவம் பெலகாவியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

எடியூரப்பா மீது போக்சோ புகார் அளித்த பெண் திடீர் மரணம்... கர்நாடகாவில் பரபரப்பு!

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்!

டெல்லியில் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்

தாய்லாந்தில் திருமணம்... சென்னையில் ரிசப்ஷன்... நடிகை வரலட்சுமியின் அடடே பிளான்!

மே 30-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

SCROLL FOR NEXT