செய்திகள்

பைக் மீது அரசுப்பேருந்து மோதி குடும்பமே உயிரிழப்பு!

காமதேனு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் குடும்பமே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செஞ்சி அடுத்த நெகனூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (40) என்பவர் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் காஞ்சிபுரத்தில் மனைவி ஞானபிரியா (35), மகள் திலக்சனா (6) உடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், ரமேஷ் மனைவி, மகளுடன் இருசக்கர வாகனத்தில் நெகனூருக்கு சென்று விட்டு பின்னர் வந்தவாசி வழியாக காஞ்சிபுரத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த புதுச்சேரி அரசுப் பேருந்து ரமேஷின் பைக் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ரமேஷ், அவரது மகள் திலக்சனா ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஞானபிரியாவை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT