சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தில் இன்று நடந்த என்கவுன்ட்டரில் 8 நக்சலைட்டுகள் மற்றும் ஒரு பாதுகாப்புப் படை வீரர் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர், கான்கேர், தண்டேவாடா மற்றும் கொண்டகான் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு, நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.
அப்போது, அபுஜ்மத் காட்டில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும், நக்ஸலைட்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 8 நக்சலைட்டுகள் மற்றும் ஒரு பாதுகாப்புப் படை வீரர் கொல்லப்பட்டதாகவும், இரு பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ரிசர்வ் போலீஸ் (டிஆர்ஜி), சிறப்பு அதிரடிப் படை (எஸ்டிஎஃப்) மற்றும் இந்தோ திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ஐடிபிபி) 53வது பட்டாலியன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் கடந்த 12ம் தேதி முதல் ஈடுபட்டுள்ளனர்.
இச்சூழலில் 8 நக்சலைட்டுகள், ஒரு பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது சிறுமி சடலமாக மீட்பு... 15 மணி நேர போராட்டம் வீணான சோகம்!
மகள் இறந்த துக்கத்தில் விபரீத முடிவு எடுத்த தாய்... கதறும் கணவன்
விழுப்புரத்தில் பரபரப்பு... தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை!