தேசம்

`இனி நிம்மதியாக வாழமுடியாது'... ஒன்றாக உயிரை மாய்த்த மாமியார், மருமகன்: தகாத உறவால் நடந்த விபரீதம்

காமதேனு

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் முறையற்ற காதல் உறவில் இருந்த பெண்ணும் அவரது மருமகனும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

பார்மர் மாவட்டத்தில் முறையற்ற காதல் உறவில் இருந்த மாமியார் தரியா (38) மற்றும் அவரது மருமகன் ஹோட்டராம் பில் (25) ஆகிய இருவரும் யாருக்கும் தெரியாமல் திங்கள்கிழமையன்று வீட்டை விட்டு வெளியேறினர். வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள் இனி நிம்மதியாக வாழமுடியாது என முடிவெடுத்து ஊர் எல்லையில் இருந்த ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பார்மர் காவல் நிலைய அதிகாரி பர்வத் சிங் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT