மாணவர்கள் பலி
மாணவர்கள் பலி நெடுஞ்சாலையில் மின்னல் வேகத்தில் வந்த கார்; சைக்கிளுடன் தூக்கிவீசப்பட்ட மாணவர்கள்: புத்தகப்பையுடன் பறிபோன உயிர்கள்
தேசம்

நெடுஞ்சாலையில் மின்னல் வேகத்தில் வந்த கார்; சைக்கிளுடன் தூக்கிவீசப்பட்ட மாணவர்கள்: புத்தகப்பையுடன் பறிபோன உயிர்கள்

காமதேனு

சைக்கிளில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது மின்னல் வேகத்தில் வந்த கார் மோதி சகோதர்கள் உள்பட 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் வாணியம்பாடியில் நடந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், வளையாம்பட்டி கிராமம் தேசிய நெடுஞ்சாலை உள்ள கிரிசமுத்திரம் அரசு பள்ளிக்கு இன்று காலை வளையாம்பட்டி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சாமுவேல் என்பவரின் மகன் ரபிக்(13), ராஜி என்பவரின் மகன்கள் விஜய் (12), சூர்யா (10) ஆகிய மூன்று மாணவர்கள் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேலூரில் இருந்து பெங்களூருக்கு அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவர்கள் மீது மோதியது. இதில் மூன்று மாணவர்களும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூன்று மாணவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் சகோதரர்கள் உள்பட மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனிடையே, விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்கும் படி உத்தரவிட்டிருக்கிறார்.

SCROLL FOR NEXT