தேசம்

உச்சத்தைத் தொடும் தங்கத்தின் விலை: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

காமதேனு

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று மீண்டும் தடாலடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து தங்கத்தின் விலை டாப் கியரில் எகிறி வருவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 41, 500 ரூபாயைத் தாண்டியுள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 41 ரூபாய் உயர்ந்து 5,191 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 328 ரூபாய் உயர்ந்து 41,528 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் இன்று கடுமையான உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் உயர்ந்து 75.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 1000 ரூபாய் உயர்ந்து 75,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

SCROLL FOR NEXT