கள்ளச்சாராயம் குடித்த மூவர் பலி
கள்ளச்சாராயம் குடித்த மூவர் பலி கள்ளச் சாராயம் குடித்த மூவர் பலி: மரக்காணத்தில் பரிதாபம்
தேசம்

விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் 3 பேர் பலி; மருத்துவமனையில் 13 பேர் அனுமதி

காமதேனு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகில் உள்ளது எக்கியார் குப்பம். இங்கு கள்ளச்சாராயம் அருந்திய மூவர் உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், எக்கியார்குப்பம் பகுதியில் நேற்று இரவு ஏராளமானோர் கள்ளச்சாராயம் அருந்தி உள்ளனர். அதில் 16 பேருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர்கள் இதனால் சிகி்ச்சைக்காக புதுவை, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 6 பேர் மயக்கமடைந்த நிலையிலேயே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலன் இன்றி சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூவர் உயிர் இழந்தனர். மேலும் 13 பேருக்கு மரக்காணம், புதுவை ஜிப்மர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இவர்களுக்கு கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த அமரன் என்பவரைப் போலீஸார் கைது செய்தனர்.

டாஸ்மாக் மதுவை விட விலை குறைவு என்பதால் இப்பகுதியில் கள்ளச்சாராயம் வாங்கிக் குடிப்போர் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்த வேறு யாரும் இருந்தால் அவர்களே தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

SCROLL FOR NEXT