ராஜவர்மன் பாலாஜி
ராஜவர்மன் பாலாஜி  
தேசம்

`என் மனைவி குரூப் மோசமானவங்க; உன்ன காலி பண்ணிடுவாங்க'- நட்டா பெயரைப் பயன்படுத்தி மிரட்டும் நபர்

காமதேனு

பாஜக தேசிய தலைவர் நட்டா பெயரை பயன்படுத்தி 90 லட்சம் பெற்று மோசடி செய்த நபர் மீது புகார் காவல்துறையினர் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்தவர் அறிவழகன்(39). தொழிலதிபரான இவரிடம் தாம்பரம் சேலையூர் அடுத்த கேம்ப் ரோட்டை சேர்ந்த ராஜவர்மன் பாலாஜி என்பவர் பாஜக நிர்வாகிகள் மூலம் அறிவழகனுக்கு 2020-ம் ஆண்டு அறிமுகமாகியுள்ளார். அதன்பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக ராஜவர்மன் பாலாஜி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மிகவும் நெருக்கமானவர், அவரின் அண்ணன் மகன் மஞ்சீஸ் என்பவரை அறிமுகம் செய்து அவருடன் புகைப்படம் எடுக்க வைத்தார். மேலும் அவர் மூலமாக கப்பல்துறையில் தலைவர் பதவி வாங்கித் தருவதாக கூறி 90 லட்சம் வரை வாங்கியுள்ளார்.

ராஜவர்மன் பாலாஜியின் நிறுவனமான ஆர்.ஆர்.என்டர்பிரைசஸ் பெயரில் 10 லட்சம் ரூபாயும், அவரது உதவியாளர் மணிவண்ணன் பெயரில் காசோலையாக 5 லட்சம், 3 லட்சம் என மொத்தம் 8 லட்சம் கொடுத்துள்ளார். வேறு ஒரு வங்கிக் கணக்கில் 5 லட்சம் அனுப்பியுள்ளார். மேலும் ரொக்கமாக பல தவணைகளாக 66 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். மொத்தமாக 90 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர். பணத்தை கொடுத்து ஒரு ஆண்டு ஆகியும் சொன்னபடி கப்பல்துறையில் பதவியும் வாங்கித் தரவில்லை, கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டால் மிரட்ட ஆரம்பித்துவிட்டனர். குடும்பத்தோடு ஒதுங்கிவிடவும், எனது மனைவி ரோஸ்லின் குரூப் மோசமானவங்க. உன்ன காலி பண்ணிடுவாங்க' என கொலை மிரட்டல் விடுத்தனர்.

ராஜவர்மன் பாலாஜி

இது தொடர்பாக சேலையூர் காவல் நிலையத்தில் கடந்த 18-ம் தேதி அறிவழகன் புகாரளித்தார். புகாரின் பேரில் ராஜவர்மன் பாலாஜி, அவரது மனைவி ரோஸ்லின், உதவியாளர் மணிவண்ணன் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து விசாரித்ததில் ஆய்வாளர் ரங்கசாமியிடம், ரோஸ்லின் கமிஷனர் அமல்ராஜ் தனது சகோதரர் தான் என மிரட்டிவிட்டு 10 நாட்களில் 10 லட்சம் ரூபாயை மட்டும் தருவதாக கூறிவிட்டு சென்று விட்டனர். மீதி பணத்தை தர முடியாது என கூறுகின்றனர். ஆய்வாளரும் கமிஷனர் பெயரை பயன்படுத்தியதால் பெரிதும் விசாரிக்காமல் அனுப்பிவைத்துவிட்டார். விசாரணைக்கு பிறகு வெளியில் வந்த ரோஸ்லின் உதவியாளர் மணிவண்ணனுக்கு சன்மானம் வழங்கினார். காரணம் ஆய்வாளரின் விசாரணையின் போது கையில் வாங்கிய பணத்தை இல்லை என்று கூறியதால் கொடுத்துள்ளார்.

வசதி படைத்த அப்பாவி தொழிலதிபர்களை குறிவைத்து அரசுத்துறையில் பதவி வாங்கித் தருவதாகவும், பாஜக தேசியத் தலைவர் நட்டாவின் அண்ணன் மகன் மிகவும் நெருக்கமானவர் என கூறி ஆசைவார்த்தைகளை அள்ளிவிட்டு பல லட்சங்களை அபகரித்து மோசடி செய்யும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT