தேசம்

பான் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணோடு இணைக்க இது தான் கடைசி தேதி: வருமானவரித்துறை கெடு

காமதேனு

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அனைத்து அரசு பணிகளுக்கும் ஆதார் கார்டு ஆதாரமாக உள்ளது. இந்திய குடிமக்களின் ஆவணமான ஆதார்கார்டு பல்வேறு முக்கிய ஆவணங்களுடன் இணைப்பது அவசியமாகிறது. குறிப்பாக வங்கி கணக்கு, செல்போன் இணைப்பு, கியாஸ் இணைப்பு ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழப்பு செய்யப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதற்கான கால வரம்பாக 2023 மார்ச் 31-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் அப்படி இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழந்து விடும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT