இளைப்பாறிய சிறுத்தை
இளைப்பாறிய சிறுத்தை  இடதுபக்கம் கார்கள், வலது பக்கம் கேன்டீன்; நடுவில் இளைப்பாறிய சிறுத்தை: பதறும் சுற்றுலாப்பயணிகள்
தேசம்

இடதுபக்கம் கார்கள், வலது பக்கம் கேன்டீன்; நடுவில் இளைப்பாறிய சிறுத்தை: பதறும் சுற்றுலாப்பயணிகள்

காமதேனு

தேனி மாவட்டம், மேகமலை மணலாறு எஸ்டேட் பகுதியில் சிறுத்தை ஒன்று இளைப்பாறிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி சுற்றுலாப் பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தேனி மாவட்டம், மேகமலை ஸ்ரீவல்லித்புத்தூர் புலிகள் காப்பத்துக்கு உட்பட்ட மணலாறு எஸ்டேட் பகுதியில் இருந்து மகாராஜா செல்லும் கேன்டீனில் இருந்து பதிவான காட்சியை வனத்துறை வெளியிட்டுள்ளது. அதிகாலை 3.30 மணி அளவில் சிறுத்தை ஒன்று சாலையின் மேலே ஏறி வருவதும், சில வினாடிகள் அங்கே இருந்து இளைப்பாறுவதும், பின்னர் அங்கிருந்து கேன்டீன் சுவர் ஓரமாக மறைவதும் சிசிடிவி கட்சியில் பதிவாகி இருக்கிறது.

சிறுத்தை

ஒரே வாரத்தில் இரண்டு சிறுத்தைகளின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டு இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். உடனடியாக சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலாப்பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT